Sunday, May 11, 2008

தாம் தூம் தமில் பாடல்கள்


Cast: Jayam Ravi, Kangana Ranaut, Lakshmi Rai, Nizhalgal Ravi, Janaki Sabesh, Anu Haasan, Chethan, Mahadevan, Bose, Srinath, Mariya
Direction: Jeeva
Music: Harris Jayaraj

http://www.tamilmp3world.com/DhaamDhoom.html



இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

குருவி தமிழ் பாடல்கள்

Cast: Vijay, Trisha, Suman, Vivek, Manivannan, Malavika
Direction: Dharani
Production: Udhayanidhi
Music: விட்யசகர்

http://www.tamilmp3world.com/Kuruvi.html

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Thursday, March 27, 2008

காத்தவராயன் (2008) பாடல்கள்

காத்தவராயன் (2008)




Actors : கரன் , விடிஷா , வடிவேலு
Director : சலங்கை துரை
Music Director : ஸ்ரீகாந்த் தேவா

http://www.tamilmp3world.com/Kathavarayan.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சந்தோஷ் சுப்ரமணியம் (2008) பாடல்கள்


சந்தோஷ் சுப்ரமணியம் (2008)


Actors : ஜெயம் ரவி , ஜெனிலியா
Director : ராஜா
Music Director : தேவி ஸ்ரீ பிரசாத்

http://www.tamilmp3world.com/SantoshSubramaniam.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இடு‌ப்பு வ‌லி‌க்கு ‌சி‌‌கி‌ச்சை


ந‌‌ம்‌மி‌ல் பல‌ர் இடு‌ப்பு வ‌லியா‌ல் அவ‌தி‌ப்படுவது‌ண்டு. இத‌ற்கு எ‌ன்ன காரண‌‌ம் என பா‌ர்‌த்தா‌ல் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ரி‌ல் உ‌ள்ள ‌கீ‌ழ் முதுகெலு‌ம்புக‌ள் தே‌ய்வது தா‌ன் இடு‌ப்பு வ‌லி‌க்கு மு‌க்‌‌கியமான காரண‌‌ம் ஆகு‌ம்.இதுத‌விர முதுகை‌த் தவறாக இய‌க்குவது, காசநோ‌ய், பு‌ற்றுநோ‌ய் போ‌ன்ற நோ‌ய்க‌ள் முதுகெலு‌ம்பை‌ப் பா‌தி‌ப்பது ஆ‌கியவையு‌ம் இடு‌ப்பு வல‌ி‌க்கு வழி வகு‌க்கு‌ம். பொதுவாக இடு‌ப்பு வ‌லி‌க்கு‌த் தர‌ப்படு‌ம் ‌சி‌‌கி‌ச்சை முறைக‌ள் என பா‌ர்‌த்தா‌ல், வ‌லி ‌நிவார‌ணிகளுட‌ன் பூரண ஓ‌ய்வு. சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்கு படு‌க்கை‌யி‌ல் ம‌ல்லா‌ந்து படு‌‌த்து, முழ‌ங்கா‌லை 45 டி‌‌கி‌ரி கோண‌த்‌‌தி‌ல் மடி‌த்து‌ப் படுத்து‌க் கொ‌ண்டா‌ல் இடு‌ப்பு வ‌லி குறையு‌ம்.இ‌தி‌ல் வ‌லி குறையாதவ‌ர்களுக்கு டிரா‌க்‌ ஷன் முறை‌யி‌ல் கா‌லி‌ல் எடை போ‌ட்டு இழுத்து‌க் கட்டி ‌விடுவா‌ர்கள‌். இ‌ப்படி சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்குப் படுத்து‌க் கொ‌‌ண்டு ஓ‌ய்வெடு‌த்தா‌ல் இடு‌ப்பு வ‌லி குணமாகும்.மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு இடு‌ப்‌பி‌ல் ப‌ட்டை அ‌ணி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌‌ம். அ‌ப்படியு‌ம் இடு‌ப்பு வ‌லி குறையா‌வி‌ட்டா‌ல் அறுவை ‌சிக‌ி‌‌ச்சை தேவை‌ப்படு‌‌ம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

வியக்க வைக்கும் 'வெங்காய' சிகிச்சை!


நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு என்றும், அதனை உரிய முறைகளில் பயன்படுத்தினால் வெவ்வேறு நலக்குறைவுகளுக்கும் எளிதில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் இயற்கை வைத்திய ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வெங்காயம் மூலம் எளிமையாக மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள் இதோ... * சோகை, பாண்டு என்றெல்லாம் குறிப்பிடப்படும் வகையறா நோய்களுக்கு, பாலும் வெங்காயமும் சேர்த்து கொடுத்தால், நற்பலன் கிட்டும். * வயோதிகர்களின் இருமலுக்கு நிவாரணமாக, வதக்கிய வெங்காயத்தையும், வெல்லத்தையும் சேர்த்துக் கொடுத்தல் நன்மை பயக்கும். * வெங்காயத்தைச் சாறாக்கி குடித்தாலோ அல்லது சூப் செய்து அருந்தினாலோ வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பற்கள் தொடர்பான வியாதிகள் நீங்குவதற்கு, வெங்காயச் சாற்றினால் வாய் கொப்பளிக்க வேண்டும். * வெங்காயத்துடன் சிறிதளவு படிகாரம் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு துரிதமாக குணமடையும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பிணிகள் பல போக்க 'துளசி' வைத்தியம்


தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக மூலிகை வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மூலிகைகள் என்றாலே, பலருக்கும் எளிதில் நினைவுக்கு வருபவனவற்றில் 'துளசி'யும் ஒன்று. ஆன்மிக மனம் கமழும் இந்த மூலிகையில், பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அதை உரிய முறையில் பயன்படுத்தினால், பிணியின்றி ஆரோக்கியமாய் வாழலாம். அந்த வகையில் துளசி மூலிகை சிகிச்சைகள் சிலவற்றை இங்கே காண்போம்.* எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து துளசி இலைகளை அரைத்து, அதனை பூசி வந்தால், படை, பற்று போன்ற சரும நோய்கள் குணமடையும். * நீரிழிவு நோயுள்ளவர்கள், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி துளசி இலையை தினமும் காலை மென்று தின்று வருவது நன்மை தரும். * ஒரு பிடி துளசி இலைகளை கஷாயமாக்கி, அதனுடன் தேன், ஏலக்காய் பொடி மற்றும் காய்ச்சிய பசும்பாலைச் சேர்த்து பருகினால், உடல் பலம் பெற்று சுறுசுறுப்பு உண்டாகும். * முதல் நாள் துளசி இலைகள் இட்ட தண்ணீரில், மறுநாள் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். * துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டால், சிறுநீர் சீராக பிரியும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

முகப் பருக்களை விரட்ட ஒளிக் கதிர் சிகிச்சை!


பருவ வயதில் பெரும்பாலானோருக்கும் முகப் பருக்கள் வருவது இயல்பு. ஆனால், பருவ வயதைக் கடந்த பின்பும் முகப் பரு பிரச்சனை நீங்காமல் தொடரும்பட்சத்தில்தான் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், 30 அல்லது 40 வயதைக் கடந்த பின்னரும் இப்பிரச்சனை உள்ளோருக்கு உகந்ததாக இருக்கிறது ஒளிக் கதிர் சிகிச்சை. நீல நிற ஒளி சிகிச்சையான இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த ஒளிக் கதிர் சிகிச்சை மூலம் முகப் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்கள் ஒழிக்கப்பட்டுவிடும். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் இந்தச் சிகிச்சை முறையில் வலி இருக்கவே இருக்காது. மேலும், இந்த ஒளிக் கதிரில் தோலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர் கிடையாது. இம்முறையைப் பற்றி, தோல்லேசர் சிகிச்சை மையங்களின் மூலம் முழுமையான விவரங்களை அறிந்து, தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

குடல் புண்ணைப் போக்க 'கீரை' வைத்தியம்!


குடல் புண், வாய்ப் புண் போன்றவற்றைப் போக்குவதற்கு மணத் தக்காளிக் கீரை என்றழைக்கப்படும் மிளகு தக்காளிக் கீரை துணைபுரிகிறது. நமது குடலில் புண் இருப்பதற்கான அறிகுறியே வாய்ப்புண் ஆகும்.குடல் புண்ணை உடனுக்குடன் கண்டறிந்து குணப்படுத்தாவிடில், மிகுந்த இன்னலைச் சந்திக்க நேரிடும்.குடல் புண்ணைக் குணப்படுத்த எளிமையான முறையைக் கையாளலாம். மணத் தக்காளிக் கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்குத் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே குடல் புண் காணாமல் போய்விடும் என்கின்றனர் மூலிகை மருத்துவர்கள். அத்துடன், இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் மிகுந்து காணப்படும் இந்தக் கீரையால், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......