Thursday, March 6, 2008

ஜீவன் மிரட்டும் 'தோட்டா'


'மிரட்டல் நாயகன்' என்ற அடைமொழிக்கு ஏற்ப, தற்போது தான் நடித்துவரும் படத்தில் நிஜமாகவே அனைவரையும் மிரட்டும் வேடத்தில் நடித்திருக்கிறார் ஜீவன்.

ஒரு ரவுடியின் வாழ்க்கையில் நடக்கும் மோதல், காதல்... காதலில் ஜெயிக்க மீண்டும் மோதல். இது தான் 'தோட்டா'வின் கதை.

ரவுடியாக ஜீவன் நடித்திருக்கிறார். ஆட்டோ டிரைவரின் மகளாக ப்ரியாமணி. துப்பாகியிலிருந்து சீறி பாயும் தோட்டா போல், செம ஸ்பீடில் நகருமாம் திரைக்கதை.

படத்தில் விஷ்ணுப்ரியன், சரண்ராஜ், சம்பத், வாகை சந்திரசேகர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, ராஜ்கபூர், மயில்சாமி, சபீதா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பழனிபாரதி, பா.விஜய் மற்றும் கபிலன் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

சண்டைப் பயிற்சிகளில் தளபதி தினேஷ் அனல் கிளப்பியிருகிறார். கலை இயக்கம் சாமிரெட்டி ரமேஷ்.'

மலைக்கோட்டை'யை விட இதில் கூடுதலாக கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார் ப்ரியாமணி. கேரளாவிலுள்ள சாலக்குடி அருவியில் 'முத்தழகு' குளியல் போடும் காட்சி தியேட்டர்களில் சூட்டை கிளப்பும் என்கிறார்கள்.

'வா வா மாப்பிள்ளை... நீதாண்டா புது மாப்பிள்ளை' என்ற பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதரும், நடிகை நீபாவும் ஆடியுள்ளனர். பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்புமாம் இந்த பாட்டு.

எஸ்.பாஸ்கரின் ஆஸ்கார் மூவிஸ் வழங்க, ஸ்ரீநிதி சர்க்யூட்ஸ் பி.மாரியப்பா பாபு படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் செல்வா.
இவருக்கு 18வது படம் இது.பெற்றோர் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம் என்ற வகையில் தோட்டவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது சென்சார்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: