Thursday, March 27, 2008

காத்தவராயன் (2008) பாடல்கள்

காத்தவராயன் (2008)




Actors : கரன் , விடிஷா , வடிவேலு
Director : சலங்கை துரை
Music Director : ஸ்ரீகாந்த் தேவா

http://www.tamilmp3world.com/Kathavarayan.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

சந்தோஷ் சுப்ரமணியம் (2008) பாடல்கள்


சந்தோஷ் சுப்ரமணியம் (2008)


Actors : ஜெயம் ரவி , ஜெனிலியா
Director : ராஜா
Music Director : தேவி ஸ்ரீ பிரசாத்

http://www.tamilmp3world.com/SantoshSubramaniam.html

பாடல்களை மேல் உள்ள இணையத்திலிருந்து இறக்கவும்

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

இடு‌ப்பு வ‌லி‌க்கு ‌சி‌‌கி‌ச்சை


ந‌‌ம்‌மி‌ல் பல‌ர் இடு‌ப்பு வ‌லியா‌ல் அவ‌தி‌ப்படுவது‌ண்டு. இத‌ற்கு எ‌ன்ன காரண‌‌ம் என பா‌ர்‌த்தா‌ல் முதுகெலு‌ம்பு‌த் தொட‌ரி‌ல் உ‌ள்ள ‌கீ‌ழ் முதுகெலு‌ம்புக‌ள் தே‌ய்வது தா‌ன் இடு‌ப்பு வ‌லி‌க்கு மு‌க்‌‌கியமான காரண‌‌ம் ஆகு‌ம்.இதுத‌விர முதுகை‌த் தவறாக இய‌க்குவது, காசநோ‌ய், பு‌ற்றுநோ‌ய் போ‌ன்ற நோ‌ய்க‌ள் முதுகெலு‌ம்பை‌ப் பா‌தி‌ப்பது ஆ‌கியவையு‌ம் இடு‌ப்பு வல‌ி‌க்கு வழி வகு‌க்கு‌ம். பொதுவாக இடு‌ப்பு வ‌லி‌க்கு‌த் தர‌ப்படு‌ம் ‌சி‌‌கி‌ச்சை முறைக‌ள் என பா‌ர்‌த்தா‌ல், வ‌லி ‌நிவார‌ணிகளுட‌ன் பூரண ஓ‌ய்வு. சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்கு படு‌க்கை‌யி‌ல் ம‌ல்லா‌ந்து படு‌‌த்து, முழ‌ங்கா‌லை 45 டி‌‌கி‌ரி கோண‌த்‌‌தி‌ல் மடி‌த்து‌ப் படுத்து‌க் கொ‌ண்டா‌ல் இடு‌ப்பு வ‌லி குறையு‌ம்.இ‌தி‌ல் வ‌லி குறையாதவ‌ர்களுக்கு டிரா‌க்‌ ஷன் முறை‌யி‌ல் கா‌லி‌ல் எடை போ‌ட்டு இழுத்து‌க் கட்டி ‌விடுவா‌ர்கள‌். இ‌ப்படி சுமா‌ர் 2 வார‌ங்களு‌க்குப் படுத்து‌க் கொ‌‌ண்டு ஓ‌ய்வெடு‌த்தா‌ல் இடு‌ப்பு வ‌லி குணமாகும்.மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு இடு‌ப்‌பி‌ல் ப‌ட்டை அ‌ணி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌‌ம். அ‌ப்படியு‌ம் இடு‌ப்பு வ‌லி குறையா‌வி‌ட்டா‌ல் அறுவை ‌சிக‌ி‌‌ச்சை தேவை‌ப்படு‌‌ம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

வியக்க வைக்கும் 'வெங்காய' சிகிச்சை!


நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெங்காயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு என்றும், அதனை உரிய முறைகளில் பயன்படுத்தினால் வெவ்வேறு நலக்குறைவுகளுக்கும் எளிதில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் இயற்கை வைத்திய ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் வெங்காயம் மூலம் எளிமையாக மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள் இதோ... * சோகை, பாண்டு என்றெல்லாம் குறிப்பிடப்படும் வகையறா நோய்களுக்கு, பாலும் வெங்காயமும் சேர்த்து கொடுத்தால், நற்பலன் கிட்டும். * வயோதிகர்களின் இருமலுக்கு நிவாரணமாக, வதக்கிய வெங்காயத்தையும், வெல்லத்தையும் சேர்த்துக் கொடுத்தல் நன்மை பயக்கும். * வெங்காயத்தைச் சாறாக்கி குடித்தாலோ அல்லது சூப் செய்து அருந்தினாலோ வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
* பற்கள் தொடர்பான வியாதிகள் நீங்குவதற்கு, வெங்காயச் சாற்றினால் வாய் கொப்பளிக்க வேண்டும். * வெங்காயத்துடன் சிறிதளவு படிகாரம் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு துரிதமாக குணமடையும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பிணிகள் பல போக்க 'துளசி' வைத்தியம்


தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக மூலிகை வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மூலிகைகள் என்றாலே, பலருக்கும் எளிதில் நினைவுக்கு வருபவனவற்றில் 'துளசி'யும் ஒன்று. ஆன்மிக மனம் கமழும் இந்த மூலிகையில், பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அதை உரிய முறையில் பயன்படுத்தினால், பிணியின்றி ஆரோக்கியமாய் வாழலாம். அந்த வகையில் துளசி மூலிகை சிகிச்சைகள் சிலவற்றை இங்கே காண்போம்.* எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து துளசி இலைகளை அரைத்து, அதனை பூசி வந்தால், படை, பற்று போன்ற சரும நோய்கள் குணமடையும். * நீரிழிவு நோயுள்ளவர்கள், நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி துளசி இலையை தினமும் காலை மென்று தின்று வருவது நன்மை தரும். * ஒரு பிடி துளசி இலைகளை கஷாயமாக்கி, அதனுடன் தேன், ஏலக்காய் பொடி மற்றும் காய்ச்சிய பசும்பாலைச் சேர்த்து பருகினால், உடல் பலம் பெற்று சுறுசுறுப்பு உண்டாகும். * முதல் நாள் துளசி இலைகள் இட்ட தண்ணீரில், மறுநாள் குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும். * துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டால், சிறுநீர் சீராக பிரியும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

முகப் பருக்களை விரட்ட ஒளிக் கதிர் சிகிச்சை!


பருவ வயதில் பெரும்பாலானோருக்கும் முகப் பருக்கள் வருவது இயல்பு. ஆனால், பருவ வயதைக் கடந்த பின்பும் முகப் பரு பிரச்சனை நீங்காமல் தொடரும்பட்சத்தில்தான் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில், 30 அல்லது 40 வயதைக் கடந்த பின்னரும் இப்பிரச்சனை உள்ளோருக்கு உகந்ததாக இருக்கிறது ஒளிக் கதிர் சிகிச்சை. நீல நிற ஒளி சிகிச்சையான இந்த முறை மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த ஒளிக் கதிர் சிகிச்சை மூலம் முகப் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்கள் ஒழிக்கப்பட்டுவிடும். சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் இந்தச் சிகிச்சை முறையில் வலி இருக்கவே இருக்காது. மேலும், இந்த ஒளிக் கதிரில் தோலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர் கிடையாது. இம்முறையைப் பற்றி, தோல்லேசர் சிகிச்சை மையங்களின் மூலம் முழுமையான விவரங்களை அறிந்து, தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

குடல் புண்ணைப் போக்க 'கீரை' வைத்தியம்!


குடல் புண், வாய்ப் புண் போன்றவற்றைப் போக்குவதற்கு மணத் தக்காளிக் கீரை என்றழைக்கப்படும் மிளகு தக்காளிக் கீரை துணைபுரிகிறது. நமது குடலில் புண் இருப்பதற்கான அறிகுறியே வாய்ப்புண் ஆகும்.குடல் புண்ணை உடனுக்குடன் கண்டறிந்து குணப்படுத்தாவிடில், மிகுந்த இன்னலைச் சந்திக்க நேரிடும்.குடல் புண்ணைக் குணப்படுத்த எளிமையான முறையைக் கையாளலாம். மணத் தக்காளிக் கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து சில நாட்களுக்குத் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே குடல் புண் காணாமல் போய்விடும் என்கின்றனர் மூலிகை மருத்துவர்கள். அத்துடன், இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் மிகுந்து காணப்படும் இந்தக் கீரையால், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்


துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களில் பெரும்பாலானோருக்கும் ஏற்படுவது சகஜமாகவே இருக்கிறது.இத்தகைய கோளாறு உள்ளவர்கள், எளிய முறையிலான வீட்டு வைத்திய முறையைக் கையாண்டாலே, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயனடைலாம்.ஓர் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் பிழிந்துவிட வேண்டும். இதை, உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இப்படித் தவறாமல் செய்தால், அஜீரணக் கொளாறு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். ஏற்கெனவே அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் கழித்து மேற்குறிப்பிட்ட கலவையை அருந்தினாலும் பலனளிக்கும்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது போல், இந்தத் தேர்வுகளுக்கும் இதே கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 980 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.மேலும் தனித்தேர்வர்கள் எழுதுபவர்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.மொத்தம் 1,700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, கண்காணிப்பு பணிகளில் 6 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், தேர்வில் முறைகேடு செய்யும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

மழை சேத விவரம் : ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட சேத விவரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். சட்டசபையில் நடந்த மழை வெள்ள நிவாரணம் குறித்த விவாதத்தி்ன்போது ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இம்மாதம் 10ம் தேதியிலிருந்து பலத்த மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக தென் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மார்ச்சில் தமிழகத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழையின் அளவு 19.9 மில்லி மீட்டர் தான். ஆனால், இந்த ஆண்டு 158.03 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமாக மார்ச் மாதத்தில் பெய்யும் மழை அளவைவிட இது 8 மடங்கு அதிகம்.
இந்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 97 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 77 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இம்மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 278 பேர் 41 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர்மழைக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 804 கால்நடைகள் இறந்துள்ளன.மழை வெள்ளத்தால் 47 ஆயிரத்து 257 ஹெக்டேர் நெற்பயிர்கள், 2 லட்சத்து 79 ஆயிரத்து 143 ஹெக்டேர் தானியம் மற்றும் பருப்பு வகைகளும் நாசமாகியுள்ளன. 62 ஆயிரத்து 882 ஹெக்டேர் தோட்டப் பயிர்கள், 41 ஆயிரத்து 68 ஹெக்டேரில் இதர பயிர்களும் சேதமாகியுள்ளன.
மொத்தம் 10 லட்சத்து 62 ஆயிரத்து 965 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்த கனமழையில் 9 ஆயிரத்து 863 கி.மீ சாலைகள், 945 பாலங்கள், 747 குளங்கள் மற்றும் வாய்க்கால்களும் மழையால் பலத்த சேதம் அடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

பாலா - கமல் இணைவார்களா..?


கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு கமலை வைத்து படமெடுக்க பாலா திட்டமிட்டுள்ளார் என்பதுதான்.

கமலை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்கள் அனைவருக்குமே உள்ள கனவு. பாலாவுக்கும் இதே ஆசை. 'நான் கடவுள்' படத்துக்கு பின்னர் கமல் படத்தை ஆரம்பிப்பது அவரது திட்டம்.

'தசாவதாரம்' படத்துக்கு பின்னர் 'மர்மயோகி'யை இயக்கி நடிக்கவிருக்கிறார் கமல்.இதன் பிறகு பாலா கேட்டால் கமல் ஒப்புக்கொள்வார்கள் என்கின்றனர்.

காரணம், பாலா இயக்கத்தில் கமல் நடித்தால் ஒரு விருதுப்படம் நிச்சயம் என்பது கோடம்பாக்கம் போடும் கணக்கு.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

Sunday, March 23, 2008

அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


தரையிலிருந்து சென்று தரையிலுள்ள இலக்கை தாக்கும் அணு ஆயுத திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் இந்த ஏவுகணை 700 முதல் 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். ஒரிசாவில் உள்ள பாலாசோர் கடற்கரை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 10.15 மணிக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் அக்னி 1 ஏவுகணை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ம் தேதி இதே பகுதியிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.தற்போது இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது ராணுவ உயரதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.
(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......