Thursday, March 6, 2008

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.10 கோடி பரிசு : பிசிசிஐ


முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பெங்களூரில் நேற்று இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், பிசிசிஐ தலைவர் ஷரத் பவார் இதனைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை டெல்லி திரும்பும் இந்திய அணிக்கு, பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் அசாத்திய திறனையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: