Wednesday, March 5, 2008

மீண்டும் வருகிறான் 'மலையூர் மம்பட்டியான்'!


தன்னுடைய மகன் பிரசாந்தை ரசிகர்கள் எவரும் மறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறார் தியாகராஜன்.பழைய 'மலையூர் மம்பட்டியானுக்கு' புதிய முலாம் பூசி, தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ராஜசேகர் இயக்கத்தில் உருவான 'மலையூர் மம்பட்டியான்' படத்தை தமிழ் ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது.அந்தக் காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட்டான இப்படத்தின் நாயகன், தியாகராஜன்.இப்படத்தின் மூலம் மிகுந்த கவனத்தைப் பெற்ற தியாகராஜன், தன் மகனுக்கு மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் மலையூர் மம்பட்டியானை ரீமேக் செய்கிறார்.

தான் நடித்த கதாப்பாத்திரத்தில் மகன் பிரசாந்தை நடிக்க வைத்து, அப்படத்தை தானே இயக்குகிறார். மேற்குலகில் பிரபலமான 'ராபின் ஹுட்' வகையறாவைச் சேர்ந்த படமான 'மலையூர் மம்பட்டியான்', தமிழில் ஒரு ட்ரென்ட் செட்டராகவே இருந்தது. இப்படத்தின் ரீமேக்கிற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இம்மாதம் 19-ம் தேதி படப்பிடிப்பைத் துவங்குகிறார் தியாகராஜன். இதனிடையே, பிரசாந்த் நடிக்கும் 'புலன் விசாரணை - பாகம் 2' படத்தையும் வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது.
(மூலம் - வெப்துனியா)


இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: