Thursday, March 27, 2008

பாலா - கமல் இணைவார்களா..?


கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு கமலை வைத்து படமெடுக்க பாலா திட்டமிட்டுள்ளார் என்பதுதான்.

கமலை வைத்து படம் இயக்குவது என்பது இயக்குனர்கள் அனைவருக்குமே உள்ள கனவு. பாலாவுக்கும் இதே ஆசை. 'நான் கடவுள்' படத்துக்கு பின்னர் கமல் படத்தை ஆரம்பிப்பது அவரது திட்டம்.

'தசாவதாரம்' படத்துக்கு பின்னர் 'மர்மயோகி'யை இயக்கி நடிக்கவிருக்கிறார் கமல்.இதன் பிறகு பாலா கேட்டால் கமல் ஒப்புக்கொள்வார்கள் என்கின்றனர்.

காரணம், பாலா இயக்கத்தில் கமல் நடித்தால் ஒரு விருதுப்படம் நிச்சயம் என்பது கோடம்பாக்கம் போடும் கணக்கு.

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: