Thursday, March 6, 2008

மகா சிவராத்திரி : சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள்



மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி சிவாலயங்களில் இன்று சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி இந்த ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.மகாசிவராத்திரி ன்று சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்து வழிபட்டால் பெருவாழ்வு வாழலாம் என்பதும்,இன்று இரவு முழுவதும் கண் உறங்காமல் விழித்திருந்து சிவனை வழிபட்டால் பெரும் புண்ணியம் கிடைக்கும் எனபதும் பக்தர்களின் நம்பிக்கை.

இந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சீபுரம், தஞ்சை மற்றும் காளஹஸ்தி உள்ளிட்ட சிவாலயங்களில் பல்லாயிரக்கணக்கான சிவபக்தர்கள் கூடி சிவபெருமானை வழிபடுவார்கள்.மகாசிவராத்திரியையொட்டி இந்தக் கோவிலிகளில் இன்று 6 கால பூஜைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி அக்கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: