Thursday, March 27, 2008

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளைப் படிப்பதற்கு 10 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது போல், இந்தத் தேர்வுகளுக்கும் இதே கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 980 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.மேலும் தனித்தேர்வர்கள் எழுதுபவர்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.மொத்தம் 1,700 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, கண்காணிப்பு பணிகளில் 6 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், தேர்வில் முறைகேடு செய்யும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

இது உங்க ஏரியா ..... படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க பா......

No comments: